1. இந்த மனிதனுக்குக் கால் ஒன்றுதான், ஆனால் கைகள் மட்டும்...
2. இரண்டு வீடுகளாக இருந்தாலும் பாதை ஒன்றுதான் இருக்கிறது...
3. வயலிலும் காட்டிலும் பட்டுத்துணிக்கடையா...
4. தேய்க்கத் தேய்க்கக் கரையும், ஆனாலும் சிறந்த மணம் தரும்....
5. இந்தத் தம்பிக்குப் பள்ளத்தைக் கண்டால் ஒரே கொண்டாட்டம், பாய்ந்து ஓடிடுவான்...
6. நீல வண்ண வயலில் பருத்திப் பூக்கள் வெடித்துக் கிடக்குது...
7. வெட்ட வெட்ட வளருவான் கருப்பு துரை...
8. நீரிலே மிதக்குது பத்து மாடி மாளிகை...
விடைகள்
1. மரம் 2. மூக்கு 3. மயில்
4. சந்தனக்கட்டை 5. வெள்ளம்
6. மேகங்கள் 7. தலைமுடி
8. கப்பல்