1. ஏறினால் வழுக்கும், இனிய கனி தரும், காயைத் தின்றால் துவர்க்கும்... இது என்ன?
2. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை...
3. ஓயாது இரையும்... இயந்திரம் அல்ல; உருண்டோடி வரும், பந்து அல்ல....
4. உடல் முழுவதும் பற்கள் இருந்தாலும் இவனுக்குக் கடிக்கத் தெரியாது...
5. ஊசி நுழையாத கிணற்றிலே, ஒரு பிடி தண்ணீர்...
6. தரையில் தாவுபவன், தண்ணீரில் மிதப்பவன்...
7. ஊரெல்லாம் சுற்றும் பாய்...
8. விண்ணில் முட்டும் மண்ணில் கொட்டும்...
9. நாக்கினால் நகரும், நல்லது பல உணர்த்தும்...
விடைகள்:
1. வாழை மரம், 2. உள்ளங்கை,
3. கடல் அலை, 4. சீப்பு,
5. இளநீர், 6. தவளை, 7. ரூபாய்,
8. மழை, 9. பேனா