அங்கிள் ஆன்டெனா

எல்லாவகைக் குரங்குகளையும் செல்லப் பிராணி களாக வளர்க்க முடியுமா?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: எல்லாவகைக் குரங்குகளையும் செல்லப் பிராணி களாக வளர்க்க முடியுமா?

பதில்: மேல்நாட்டினர் பாம்பு, ஓணான், ஆமை, காக்கை, வல்லூறு, குரங்கு என்று ஏகப்பட்ட விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர்.

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் சிலந்தியைக் கூட செல்லப் பிராணியாக வளர்த்து வந்தாராம். கம்பளி ரோமக் குரங்குக் குட்டியை 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வளர்த்திருக்கிறார் ஒரு அமெரிக்கர்.

பொறுமை அதிகம் உள்ளவர்கள் மட்டுமே குரங்குகளை வளர்க்க முடியும். அதிலும் எல்லா வகைக் குரங்குகளும் வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல.

ரீசஸ், மர்மோசெட், அணில் குரங்கு, ஆந்தைக் குரங்கு ஆகியவை வளர்ப்பதற்கு ஏற்றவை. ஒரு வார காலத்துக்குள் இவை நம்மோடு ஒட்டிக் கொள்ளும். ஆனால் சீ... போ... என்று நாயை விரட்டுவது போலக் கோபம் எல்லாம் காட்டக் கூடாது. குழந்தையை வளர்ப்பது போல கவனித்துக் கொள்ள வேண்டும்.

குரங்குகளுக்கு பொசுக் பொசுக்கென்று கோபம் வரும். அதிலும் சிம்பன்சி வகைக் குரங்கு ரொம்ப டேஞ்சர். சிறுத்தையே பெட்டர் என்று நினைக்க வைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com