""இந்த ஊர்லே என்ன மாதிரியே யாரோ "அசலூர்' ங்கிற பேர்லே இருக்காங்க போலிருக்கு!''
""எப்படிச் சொல்றே?''
""நான் இந்த அட்ரûஸ கொடுத்து யார் கிட்டே கேட்டாலும், ""நீங்க அசலூரா?'' .....ன்னு கேட்கறாங்க!...''
நெ.இராமன், சென்னை.
""25 பெட்ரூம் இருக்கிற இடத்தைப் பார்த்தேன்!''
""அப்படியா?... எங்கே?''
"" அதான்.... ஆஸ்பத்திரி!''
ச.கார்த்திக் குளத்தூர்.
""நம்ம ஸ்கூல் வாட்ச்மேன் திட்டினாரா?... ஏன்?''
""போஸ்ட்மேன், போஸ்ட் தர்றா மாதிரி நீங்க, வாட்ச் மேன்!... வாட்ச் தருவீங்களான்னு கேட்டேன்!....''
பெ.சிவா, சிட்லபாக்கம்.
""எதுக்கு ராவணன் வேஷம்தான் வேணும்னு அடம் பிடிக்கிறே?''
""வேஷம் போடறவங்களுக்கு தலைக்கு ஐநூறு ரூபாய் தர்றாங்களாமே!''
முத்தம் பாளையம், ஈரோடு - 9.
""காப்பி அடிக்கிறது மகா தப்பு!''
""அப்புறம் ஏன் ஜெராக்ஸ் கடை வெச்சிருக்காங்க?''
பொ.பாலாஜி, அண்ணாமலை நகர் - 608002
""செல்!...., சொல்!.... என்ன வித்தியாசம்?''
""ஒரு கால்'...''
எ.கே.ஸ்ரீசாகம்பரி, அந்தியூர்.