அருமைத் தம்பி ராஜபாண்டி!

அருப்புக்கோட்டை எனும் ஊரில் அருமைத் தம்பி ராஜபாண்டி
 அருமைத் தம்பி ராஜபாண்டி!

பாராட்டுப் பாமாலை! 48
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது

 அருப்புக்கோட்டை எனும் ஊரில்
 அருமைத் தம்பி ராஜபாண்டி
 பொறுப்பு மிக்க மாணவனாம்
 பொய்யிலை இதுகாண் உண்மைதான்!
 
 காவல்துறையின் நண்பனுமாய்
 கடமை செய்தான் அந்நாளில்
 ஆவல் பொங்கச் செய்கின்றான்
 அது போல் புதிதாய் இந்நாளில்!
 
 விபத்து எங்கும் நேர்ந்தாலோ
 விரைந்து சென்று உதவிடுவான்
 ஆபத்தில் சிக்கிய பேர்களையும்
 அவசர ஊர்தியில் அனுப்பிவைப்பான்!
 
 ஒருத்தனாக தனித்திருந்து
 உண்ணா நோன்பு இருந்தவன்தான்
 அருப்புக் கோட்டைக்கு ரயில்வரவே
 அரும்பா டுகள்பல பட்டவன்தான்!
 
 புயல்பாதித்த பகுதிகளுக்கெல்லாம்
 போய் பல சேவைகள் செய்தவன்தான்
 வியப்பாய் இருக்கும் அவன் செயல்கள்
 விழிப்புணர்வு நூல்பல நெய்தவன்தான்!
 
 இருபத்தைந்து ஆண்டுகளாய்
 செய்யும் சமூக சேவைதான்
 வருத்தம் ஏதும் காட்டாத
 மனையாள் தக்கத் துணையாள்தான்!
 
 குஜராத் பூகம்ப சேவை செய்தான்
 அப்துல் கலாமைச் சந்தித்தான்
 இலட்சிய இளைஞர்கள் அறக்கட்டளை
 எனும் பேர் சூட்டி வாழ்த்தினரே
 
 பொன் மாணிக்கவேல்-திலகவதி
 பொறுப்பு மிக்க அதிகாரிகள்
 மண்ணின் மைந்தன் இவனெனவே
 மனதாரப் போற்றி வாழ்த்தினரே!
 
 எத்தனை வலி அவமானங்கள்
 இவன் தாங் கியதையா மறியோம்
 அத்தனை வலிக்கும் ஒத்தடம்தான்
 ஆன்றோர் வாழ்த்தும் பாராட்டும்!
 
 எம்.பி. எம்.எல்.ஏ பலரையுமே
 சந்தித்துக் காரியம்பல ஆற்றியவன்
 தம்பி என்றே நானழைப்பேன்
 தகுதி வைத்தே போற்றுகின்றேன்!
 
 -அருப்புக்கோட்டை செல்வம்
 இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
 அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com