விடுகதைகள்

குளம் குட்டைகளில் பிறந்தவன், குடிசைகளில் வளர்ந்தவன், சந்தைக்குப் போனவன், பந்தியில் படுத்தவன்...

 1. தன்னை வெட்டியவனின் தாகத்தைத் தீர்ப்பவன்...
 2. ஒவ்வொரு நாளும் பிறந்து ஒவ்வொரு நாளும் இறந்து விடுவான் இவன்...
 3. நாவில் வைத்தாலோ கசப்பு, ஆனால் நோய்க்கு நல்ல மருந்து...
 4. விளக்கு போல இருப்பாள், மரத்திலே பூத்திருப்பாள்...
 5. குளம் குட்டைகளில் பிறந்தவன், குடிசைகளில் வளர்ந்தவன், சந்தைக்குப் போனவன், பந்தியில் படுத்தவன்...
 6. இந்தப் பூவுக்கு நறுமணம் இல்லாவிட்டாலும் மனதுக்கு மகிழ்வூட்ட நன்றாகத் தெரியும்...
 7. அந்தரத்தில் தொங்கிக் கொண்டே அழகிய ஆடையை நெய்கிறான்...
 8. வாயில் மலரும் பூ, நோயை விரட்டு பூ...
 விடைகள்:
 1. இளநீர், 2. நாள்காட்டி தாள்
 3. வேப்பிலை, 4. பூவரசம்பூ
 5. கோரைப்பாய், 6. மத்தாப்பூ
 7. சிலந்திப்பூச்சி, 8. சிரிப்பு
 -ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com