""அங்கிள் நீங்க அந்த படத்திலே செகண்ட் ஹீரோன்னு சொன்னீங்க....
படத்திலே ஆளையே காணோமே....
""ஆமா!... நான் படத்திலே மூணு செகண்ட்தானே வரேன்!....''
எஸ்.வேல் அரவிந்த், குளத்தூர்.
"" ஜான் ஏறினா முழம் சறுக்குது!...''
"" அது எப்படி?.... ஜான் ஏறினா
ஜான்தானே சறுக்குவான்!...''
கு.வைரச்சந்திரன், திருச்சி -620008
""பரீட்சை பேப்பரிலே குருசாமி துணைன்னு எழுதினியே...
அது உங்க குலதெய்வமா?
""இல்லே..... பேப்பரைத்
திருத்தற வாத்தியார்!...''
ஜி,சரவணன், நாமக்கல்-638183.
""என்ன படிக்கிறே?...''
""எம்.பி.ஏ. படிக்கிறேன் பாட்டி!...''
""ஏன்?... எம்பாமல் படிக்க முடியாதா?
வி. ரேவதி, தஞ்சாவூர்.
""ஜோசியமே பொய்தான்!...''
""கிளி ஜோசியம்?...''
""பச்சைப் பொய்!...''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி
""ஒரு ஓவருக்கு ஆறு பால்...''
""என்னது இது பயித்தியக்காரத்தனமா
இருக்கு?... ஆடறவர் ஆறு பாலை
எப்படி பாட்டிங் பண்ண முடியும்?...''
ஆ.சுகந்தன், கம்பைநல்லூர்.