குறள் பாட்டு: காலம் அறிதல்

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து.
குறள் பாட்டு: காலம் அறிதல்

பொருட்பால்  -  அதிகாரம் 49  -  பாடல் 6

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேரும் தகைத்து.


-திருக்குறள்

ஆக்கச் செயல்களில் முயல்வோர்கள் 
ஆரவாரம் ஏதும் இல்லாமல் 
ஊக்கம் தளர்ந்து போகாமல் 
ஒடுங்கி அடங்கி வாழ்வார்கள்

எதிரியைத் தாக்கும் நேரத்தில் 
பின்னோக்கிச் சென்று பாய்வதுபோல் 
தாக்குப் பிடித்துக் கொள்வார்கள் 
தருணம் பார்த்து வெல்வார்கள்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com