பொருட்பால் - அதிகாரம் 49 - பாடல் 6
ஆக்கச் செயல்களில் முயல்வோர்கள்
ஆரவாரம் ஏதும் இல்லாமல்
ஊக்கம் தளர்ந்து போகாமல்
ஒடுங்கி அடங்கி வாழ்வார்கள்
எதிரியைத் தாக்கும் நேரத்தில்
பின்னோக்கிச் சென்று பாய்வதுபோல்
தாக்குப் பிடித்துக் கொள்வார்கள்
தருணம் பார்த்து வெல்வார்கள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்