கருவூலம்: விந்தையான பறவைகள்

உலக அளவிலேயே கொக்கு இனங்களில் மிகப்பெரிய இனம் சாரசக் கொக்குகள்.
கருவூலம்: விந்தையான பறவைகள்


விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு

உலக அளவிலேயே கொக்கு இனங்களில் மிகப்பெரிய இனம் சாரசக் கொக்குகள். எழுந்து நிற்கும் பொழுது 5 அடிக்கு மேல் உயர்ந்து இருக்கும். கழுத்தைச் சுற்றி பனிச் சென்று தெரியும் ஒரு கரும் சிவப்பு நிறப்பட்டை இதனை மற்ற சாரசக் கொக்குகளுக்கிடையே அடையாளம் காண உதவுகிறது. 
நுனி கூர்மையான சற்று நீளமுள்ள, மூக்கு கருப்பு கலந்த காப்பி நிறத்தைக் கொண்டதாகும். ஆண், பெண் இனத்தவைகளிடையே வித்தியாசம் இராது.

உயரமான கால்களும் விரல்களும் சிவப்பு நிறமுள்ளவை. பார்வைக்கு மிக அழகான இந்தப் (அன்ன)பறவைகள் வெகுதூம் விருந்தாடிச் செல்லும் ஆற்றலைக் கொண்டது.

நமது இந்தியாவில் மைசூர் வரை மட்டுமே உள்ள சாரசச் கொக்குகள் வட மாநிலங்களில் எங்கும் பரவலாகக் காணப்படுகின்ற ஓர் அழகான பறவையினம். தனது இணை இறந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும். எப்பொழுதும் இணையோடு மட்டுமே சாரசக் கொக்குகளைக் காண முடியும்.
இல்லறத்தில் இணை சேருவதற்கு முன் சற்ற நேரம் இருபாலரும் இறகை விரித்து தாவித் தாவி காதல் நடனமாடும். சாரசக் கொக்குளை அன்னப்பறவை என்று அழைப்பதுண்டு.

ஆண், பெண் இரு இனமும் அடைகாத்து குஞ்சுகளைப் பராமரிக்கும். ஜுலை முதல் டிசம்பர் வரையிலான காலங்களிலேயே இனப்பெருக்கம் நடக்கும். பாம்புகளம், சிறு உயிரினங்களும், தளிர் இலைகளும், பலதரப்பட்ட தானிய வகைகளும் இதன் உணவாகும். சாரசக் கொக்குகளை நெருங்கும் விரோதிகளான நாய் போன்ற விலங்கினங்களை ஆக்ரோஷத்துடன் விரட்டிவிடும் ஆற்றல் கொண்டவை. விஞ்ஞான ரீதியாக இதை கிரஸ் ஆண்டி கோனே என்று அழைப்பர்.

குட்டை வால் நீளமான இறக்கை "ஆல்பட்ராஸ்'

கடற் பறவையினமான குட்டை வால் ""ஆல்பட்ராஸ்'' மிகவும் ஆபூர்வப் பறவைகளுள் ஓன்றாகும். இதன் உடலில் மஞ்சள், வெள்ளை, நீலம் கருப்பு நிறங்களும், அலகில் இளஞ்சிவப்பு, பச்சை நிறங்களும் கலந்து காணப்படுகின்றன.

6 முதல் 7 கிலோ உடை வரை உடல் வளர்ச்சியை இவை பெறுகின்றன. குட்டை வால் ஆல்பட்ராஸ் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இதன் இறக்கையின் நீளம் 2.4 மீட்டர். உடலின் நீளம் அலகிலிருந்து வாழ்வரை ஒரு மீட்டர் ஆகும். வடக்கு பசிபிக் கடற் கரையோரம் முன்பு அதிகம் காணப்பட்ட இப்பறவைகளின் எண்ணிக்கை இன்று 900 என்று அளவிலேயே தான் உள்ளது. 

வருடத்தில் ஒரு முட்டை மட்டுமே இட்டு பெண் ஆல்பட்ராஸ் குஞ்சு பொரிக்கிறது. ஆறு மாதத்தில் குஞ்சு பறக்கத் தொடங்கி விடுகிறது. அதன் பிறகு பெற்றோர் பறவைகளை மறந்து விட்டு பறந்து கடலில் வெகு தூரத்திற்கு அப்பால் சென்று விடும்.

நாலு வருடம் கழித்து தான் அந்தப் பறவை தனது பிறந்த இடத்திற்கு வந்து சேரும். தற்போது இந்த அபூர்வப் பறவை இனத்தைப் பெருக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாண்ட்ஹில் கொக்கு

இந்தக் கொக்குள் கூட்டம் கூட்டமாக இடப் பெயர்ச்சி செய்வதுண்டு. இணை கூடும் போது இவை ஆடும் நடனம் மயில் ஆட்டத்தை விட அழகாக அற்புதமாக இருக்கும்.

ஆண் பறவையும், பெண் பறவையும் நேருக்கு நேர் நின்று இறக்கையை அடித்து மேலே எழும்பும். அப்போது அவற்றின் கால் மட்டும் முன் நோக்கி இருக்கும். பிறகு முதலில் ஆண் பறவையும் பின்பு பெண் பறவையும் ஒன்றுக்கு ஒன்று தலை தாழ்த்தி மரியாதை செய்து கொள்ளும். இதுவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

புத்திசாலிப் பறவை 

கூட் என்றழைக்கப்படும் ஒரு வகை நீர்ப்பறவை ரொம்ப புத்திசாலியானது. இப்பறவை ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் கரை ஓரத்தில் கூடு கட்டி வாழும். நீர்த்தாவரமான நாணல் போன்ற ஒரு வகைப் புல்லினால் தான் கூட்டை அமைத்துக் கொள்ளும். ஆனால், கோடைக் காலத்தில் இத்தாவரம் அதிக அளவில் நீர் நிலைகளில் வளராது. அந்த சமயங்களில் புதியதாக கூடுகட்ட முடியாமல் தவிக்க நேரிடுமே என்று இப்பறவை என்ன செய்யும் தெரியுமா?

நீர்த்தாவரம் நிறைய வளர்ந்திருக்கம் போதே, தனக்கு கூடு கட்ட வேண்டிய இடத்தில் நீர்த்தாவரத்தை சுற்றி 3,6 கி.மீ சுற்றளவுக்கு 90 செ.மீ உயரத்திற்கு கூழாங்கற்களைக் கொண்டு முக்கோண அமைப்பில் பிரமிடு போன்ற அமைத்துக் கொள்ளும். இது அந்தத் தாவரத்துக்கு அரண் போல் அமைந்திருக்கும். கோடைக்காலத்தில் தாவரம் காய்ந்து போனாலும், அந்தக் கற்கள் பிரமிடுக்கு உள்ளேயே தானே இருக்கும். அதைத் தன் கூடாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தப் பறவை. 

கூடு கட்டத் தெரியாத எல்ஃப் ஆந்தை

இவ்வகை ஆந்தைகள் பெரும்பாலும் கள்ளிச் செடிகளின் நடுவே வசிக்கும். இது 38 செ.மீட்டர் நீளமே உடையது. உலகிலுள்ள சிறிய வகைப் பறவைகளில் இதுவும் ஒன்று. கூடுகட்டத் தெரியாத இந்த ஆந்தைகள் பகலில் மரங்கொத்திப் பறவைகள், மரங்களில் ஏற்படுத்தியிருக்கும் மரப் பொந்துகளில் வசிக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும். புழுக்கள், வெட்டுக் கிளிகள் போன்றவற்றை இது விரும்பி உண்ணும்.

பறக்காத "ரோடு ரன்னர்' பறவை

அமெரிக்காவில் தென்மேற்குப் பகுதிகளிலும் மெக்சிகோவிலும் காணப்படும் ரோடுரன்னர் என்ற பறவை பறக்காது. ஆனால் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

இந்தப்பறவை பாம்பு, பல்லி மற்றும் மண்ணுக்குள் இருக்கும். பூச்சிகளைப் பிடித்து பாறையில் அடித்துக் கொன்ற பிறகே உண்ணும்.

அப்பா- அம்மா தெரியாத பறவை

ஆஸ்திரேலியாவின் மாலிபவுல் என்னும் பறவை ரொம்ப விநோதமானது. இந்தப்பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில் தாய்ப்பறவை மூட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடி வைத்துவிட்டு சென்று விடும். குஞ்சுகளோ பொரிந்து வெளி வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்துவிடும். (அந்த அளவில் அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன) இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை.

தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. இந்தப் பறவை பற்றி இன்னொரு விசேஷமான தகவல் பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இது தான்.

ஜெயின்ட் பெட்ரெல்ஸ் பறவை

ஜெயின்ட் பெட்ரெல்ஸ் என்பது ஒரு வகைக் கடல் பறவை. பனிக்கட்டியுள்ள கடல் பிரதேசங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பறவைகள் தரையில் இருக்கும் போது அளவுக்கு அதிகமாக உணவு உண்ணும் பறக்க ஆரம்பிக்கும் போது உடல் கனமில்லாமல் இருப்பதற்காக ஓரளவு உணவைக் கக்கிவிடும். 

உறுமும் டானி பறவை

இந்த டானி பறவையின் வாய் தவளை மாதிரி இருக்கும். இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆஸ்திரேலியா கண்டத்தைச் சேர்ந்தது. இந்தத் தவளை வாய், பூச்சிகளைப் பிடிக்க பயன்படுகிறது.

இதனுடைய அலகு பரந்து வளைந்து இருக்கும். இறக்கைகளும், உடலும் மிகவும் மிருதுவாக இருக்கும். இதனுடைய கால்கள் குட்டையாகவும் பாதங்கள் சிறியதாகவும் பலமற்றதாகவும் இருக்கும்.

சோம்பேறித்தனமான பறவை . பறவை இனங்களிலேயே பறக்கும் சக்தியற்ற பறவை. இரவில் தரைகள் மீது ஊர்கின்ற பூச்சிகளை பிடித்துத் தின்னும். வாயைச் சுற்றியுள்ள கடினமான கன்ன மீசை இரையைப் பிடிக்க உதவும்.

பகலிலே ஓய்வு எடுக்கும் போது தன்னுடைய இறகுகளை விரித்து வைக்கும். பார்ப்பதற்கு மக்கிப் போன மரத்தின் கிளை போன்று இருக்கும் இறகுகள் மரக்கிளையின் பட்டையின் நிறத்தில் இருப்பதால் எதிரிகள் ஏமாந்துவிடும்.

கிளையின் மீது கண்களை மூடி தலையை மேல் பக்கமாக வைத்துப் படுக்கும். இரவு முழுவதும் ஊம், ஊம், ஊம் என்று ஒரு விரமான உறுமல் சப்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் இந்த டானி பறவை.

பாடும் ஆண் பறவைகள்

பறவைகளுக்கு குரல்வளை கிடையாது. ஆனால் சுவாசக் குழாயின் அடிப்பாகத்தில் பாட்டெழுப்பும் உறுப்பு உண்டு. பாடும் பறவைகளின் பெரும்பான்மையானவை. பெண் பறவைகள் அல்ல. ஆண் பறவைகள் தான்.

பறவை பாடுவது எப்போது?

பறவைகள் தரையில் இருக்கும் போது பாடாது. மரக்கிளைகளில் தான் பாதுகாப்பாக அமர்ந்திருக்கிறோம் என்று உணரும் போது தான் பாடும்.

அதிக நாள் வாழும் பறவை

ஃபால்கன்ஸ் என்று ஒரு பறவை இருக்கிறது. இந்த வகைப் பறவை தான் பறவைகள் இனத்திலேயே அதிக நாள் வாழும் பறவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com