1.தாகம் போக்கும் தண்ணீர் அல்ல, களைப்பைப் போக்கும் மருந்தும் அல்ல, சண்டைக்குச் செல்லும் ஆயுதம் அல்ல...
2. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலை கிறான். இவன் யார்?
3. சின்னத்தம்பிக்கு, தொப்பிதான் வினை...
4. அடிக்காமலேயே அலறித் துடிக்கும்...
5. அக்கா விதைத்த அழகு முத்து, அள்ள முடியாத முத்து...
6. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்...
7. நீந்தத் தெரியும் மீன் அல்ல, நடக்கத் தெரியும் மனிதனும் அல்ல, இறக்கை இருந்தும் பறக்காது...
8. தண்ணீரிலே நீந்தி வரும் தரையிலோ தாவி வரும்...
விடைகள்:
1. சோடா, 2. கடல் அலை
3. தீக்குச்சி, 4. தொலைபேசி
5. கோலம், 6. கானல் நீர்,
7. வாத்து, 8. தவளை