பொருட்பால் - அதிகாரம் 98 - பாடல் 6
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.
- திருக்குறள்
சிறுமைக் குணம் உள்ளவர்கள்
உள்ளத்திலே நல்லுணர்வு
இடம்பிடிக்க எண்ணாது
பெரியவரைப் போற்றாது
பெரியோரின் எண்ணங்கள்
நற்செயல்கள் ஆகிடும்
அவர்கள் செயலை ஏற்காமல்
அவதூறு சொல்வார்கள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்