ஒரு விழாவில் குழந்தைகளுக்கு பல வண்ண பலூன்களை ஊதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் தமிழறிஞர் கி.வா.ஜ! பலூனை ஊதிக் கொடுப்பவரிடம் ஒரு குழந்தை, ""எனக்கு ஒரு ஊதா பலூன் குடுங்க!...'' என்று கேட்டது. அவரும் ஒரு ஊதா பலூனை ஊதிக் கொடுத்தார். இதை கவனித்த கி.வா.ஜ, பலூன் ஊதிக் கொடுப்பவரிடம், ""என்னங்க குழந்தை "ஊதா பலூன்' கேட்குது!.....நீங்க ஊதிக் கொடுக்கறீங்களே!'' என்று கூறவும் அங்கே இருந்தவர்கள் அதை ரசித்துச் சிரித்தார்கள்.