""என்னடா சாப்பிடறே?...''
""தோசை!.... உப்புமா!...''
""என்னடா நான் ஒரு கேள்வி கேட்டா நீ ஒரு கேள்வி கேட்கறே?.... தோசை எப்படி
உப்பும்?....பூரிதான் உப்பும்!''
ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
""எனக்கு அவள் "பழிப்பு' காட்டிக்கிட்டே இருக்கா டீச்சர்!''
""எதுக்குடி அப்படிப் பண்றே?''
""அவள்தான் எங்கிட்டே, "பழிப்பு' ன்னா
என்னன்னு கேட்டாள்!''
வி.ரேவதி, 68, தஞ்சாவூர் - 613007.
""செல்ஃபோன்லே எப்படிடா டி.வி. பார்க்கறது?''
""செல்ஃபோன் காமராவை ஆன் செஞ்சு டி.வி. முன்னாடி பிடிச்சுக்கிட்டா டி.வி. யை செல்ஃபோன்லயே பார்க்கலாம்!''
எம்.சரவணன், தண்டராம்பட்டு, - 606706.
""இந்தப் பேன் மருந்தைத் தூங்கப் போகும்போது போடணுமாம்!''
""பேன் எப்போ தூங்கும்னு யாருக்குத் தெரியும்!''
கி.திவ்யஜோதி, சென்னை.
கருப்பு மாடு காலையிலே 4 மணிக்குப் புல் தின்னது!.... வெள்ளை மாடு
காலையிலே 10 மணிக்குப் புல் தின்னது!....
எந்த மாடு முன்னாடி சாணி போடும்?...''
""இரண்டு மாடும் பின்னாடிதான் சாணி போடும்!''
டி.மோகன்தாஸ், நாகர்கோவில்.
""உங்கப்பா நிறைய முத்திரைகளைப் பதிச்சவரா?.... என்னவா இருக்கார்?''
""தபால் ஆபிசிலே இருக்கார்!''
நெ.இராமன், சிவாலயா, சென்னை - 600074.