பெரியாரைப் பிழையாமை

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார் பிழைத்து ஒழுகுவார்.
பெரியாரைப் பிழையாமை

பொருட்பால்  -  அதிகாரம்  90  -  பாடல் 6

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் 
பெரியார் பிழைத்து ஒழுகுவார்.


- திருக்குறள்


நெருப்பு சூழ்ந்து சுட்டாலும் 
பிழைத்துக் கொள்ள வாய்ப்புண்டு
தூய்மையான சான்றோர்க்குப் 
பிழைகள் செய்யக் கூடாது

மீறிப் பிழைகள் செய்தவர்கள் 
மீளமுடியாமல் தவிப்பார்கள் 
தப்பிப் பிழைக்க வழியின்றித் 
தண்டனை பெற்று வருந்துவார்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com