திருடனை திருத்திய குடும்பம் 

ரத்னாகரன் என்பவன் காட்டு வழியில் போவோரை எல்லாம் தாக்கி பணம் நகைகளை பறித்து வந்தான்.
திருடனை திருத்திய குடும்பம் 

நினைவுச் சுடர் !
ரத்னாகரன் என்பவன் காட்டு வழியில் போவோரை எல்லாம் தாக்கி பணம் நகைகளை பறித்து வந்தான்.
ஒரு நாள் நாரத மகரிஷி வந்தபோது, கத்தியை காட்டினான் ரத்னாகரன்.
"ஏனப்பா! உனக்கு என்ன கெடுதல் செய்தேன் எதற்காக கொல்ல வருகிறாய்?'' என கேட்டார் நாரதர்.
"நீர் எனக்கு கேடு செய்ய வில்லை எனக்கு தேவை உன்னிடம் உள்ள பொருட்கள் தந்தால் விடுகிறேன்'' என்றான்.
"அதுசரி திருடுவதை கைவிட்டு, இயற்கையாக விளையும் கிழங்கு பழங்களை சாப்பிட்டு வாழக்கூடாதா ?...''
"நீர் சொல்வது எனக்கு மட்டுமே சரியாக இருக்கும். ஆனால் என் குடும்பத்தினர் வசதியாகவே வாழ விரும்புகின்றனர். அவர்களுக்காகவே திருடுகிறேன்'' என்றான்.
" கொலையும் திருட்டும் பாவமல்லவா.. உன் குடும்பத்தினருக்காக செய்வதாக சொல்கிறாயே! உன் பணத்தில் வாழும் அவர்கள் உன் பாவத்தை பங்கிட்டால் பெறுவார்களா?...'' என கேட்டார் .
"தெரியவில்லையே!...''என விழித்தான் திருடன். 
"காத்திருக்கிறேன் உன் வீட்டாரிடம் கேட்டு வந்து சொல்!...'' என்றார் நாரதர்!
அசட்டுத்தனமாக சிரித்தான் ரத்னாகரன்.
"சரியான ஆளப்பா நீர்!... நான் போனதும் தப்பித்து ஓடுவத ற்கா?'' என்றான்.
"வேண்டுமானால் இந்த மரத்தில் என்னைக் கட்டி வைத்து விட்டு செல்...'' அவனும் அப்படியே செய்தான்.
"வீட்டுக்குப் போய் தந்தையிடம் நான் திருடிய பணத்தில் நான் தானே சாப்பிடுகிறீர்கள் ஏன் பாவத்தில் ஒரு பகுதியை வாங்கி கொள்வீர்களா? ‘‘என கேட்டான்.
"மகனே! பெற்றோரை காப்பது பிள்ளைகளின் கடமை. நீ எந்த தொழில் செய்தால் என்ன இதற்காக உன் பாவத்தில் பங்கு பெற முடியாது!'' என்றார். தாயிடம் கேட்க அவளும் அதே பதில் கிடைத்தது. 
மனைவியோ, "உனக்கு என்னாயிற்று? காப்பது ஆண்களின் கடமை தானே !அதற்காக உம் பாவத்தை ஏற்க எனக்கென்ன தலைவிதியா?...'' என்றாள.
மகனும் , "அப்பா! பெரியவனாகி பணம் சம்பாதித்து நான் உங்களுக்குச் சோறிடுவேன்!... ஆனால், அதற்காக பாவத்தை ஏற்க மாட்டேன்'' என்றான்.
...நான் திருடிக் கொண்டு வரும் பணத்தை பெற விரும்பும் இவர்கள், எனது பாவத்தை ஏற்க மறுக்கிறார்களே! நெருங்கிய உறவினர்கள் கூடப் பயப்படும் இந்தப் பாவ காரியத்தை இனி செய்தல் தகாது! என சிந்தித்தபடியே காட்டிற்குள் திரும்பினான். கட்டிவைத்த நாரதரை அவிழ்த்து விட்டான்!
"புண்ணியத்தைச் செய்வாயப்பா!... அது பங்கிடப் பங்கிடப் பெருகும்!.....'' என்றார் நாரதர்.
அதன்பின் அவரது அறிவுரையால் ராம நாமத்தை இடைவிடாமல் ஜபித்தான்! தவத்தில் ஈடுபட்ட அவனும் "வால்மீகி' என்னும் மகரிஷியாகி ராமாயணத்தை எழுதும் பாக்கியம் பெற்றான்.

ஜோ. ஜெயக்குமார் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com