அறத்துப்பால் - அதிகாரம் 32 - பாடல் 7
- திருக்குறள்
எத்தனை கோபம் இருந்தாலும்
எத்தனை பகைகள் இருந்தாலும்
எள்ளளவேனும் துன்பத்தை
எவர்க்கும் செய்ய எண்ணாதே
எத்தனைதான் இருந்தாலும்
எங்கு எங்கு சென்றாலும்
எவர்க்கும் துன்பம் செய்யாமல்
இருப்பதுவே மேலாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்