அங்கிள் ஆன்டெனா

உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பல திறமைகளைக் கொடுத்துள்ளான். அது போலத்தான் இதுவும்.
அங்கிள் ஆன்டெனா

கேள்வி:
 பசுக்களால் நீச்சல் அடிக்க முடியுமா?
 பதில்: உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பல திறமைகளைக் கொடுத்துள்ளான். அது போலத்தான் இதுவும். எருமைகளைப் பார்த்திருப்பீர்கள். நீருக்குள்ளேயே கிடக்கும். ஆனால் பசுக்கள் அப்படியல்ல. தேவைப்பட்டால்தான் நீருக்குள் இறங்கும்.
 அதே போலத் தேவைப்பட்டால் நீரில் நீச்சல் அடிக்கவும் பசுக்களுக்குத் தெரியும். இக்கட்டான நிலை ஏற்படும்போது நாய்கள் நீரில் நீச்சல் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோலத்தான் இதுவும். பசுக்கள் நன்றாகவே நீச்சல் அடிக்கும். மனிதர்களுக்குப் பழகினால்தான் நீச்சல் வரும். ஆனால் பசுக்களுக்கு இயற்கையாகவே அந்தத் திறமை இருக்கிறது என்பது உண்மைதான்.
 ரொம்ப நாட்களுக்கு முன்பு பல பசுக்கள் ஒன்றாக நீரில் நீச்சல் அடித்து அக்கரைக்குச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
 -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 எங்க வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள குட்டையில் கொக்கு வருவதைப் பார்த்திருக்கிறேன். உலகில் எத்தனை வகையான கொக்குகள் உள்ளன?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com