1. கொத்தனார் கட்டாத வீடு... குடக்கூலிக்கு விடாத வீடு...
2. வெளியில் போனால் உடன் வருவான்... வீட்டுக்கு வந்தால் வெளியே இருப்பான்...
3. காலையில் விரித்தாடுவாள்... மாலையில் சுருங்குவாள்... சூரியனுக்குப் பிடித்தவள்...
4. துள்ளித் துள்ளிப் போனாலும் துவளாமல் போவான்...
5. அலைகள் இல்லாத குளம், ஆட்கள் இறங்காத குளம்...
6. அந்தி வரும் நேரம்... அவளும் வரும் நேரம்...
7. உப்பை உண்டதில் உறங்காமல் அலைபவன்...
8. இரவில் கண் விழிப்பாள்... பகலில் தூங்குவாள்...
விடைகள்
1. தூக்கணாங்குருவிக் கூடு
2. செருப்பு 3. தாமரை
4. தவளை 5. கண்கள்
6. நிலா 7. கடல் 8. அல்லிப் பூ
-ரொசிட்டா