பொங்கல் திருவிழா வந்தது
புதிய மகிழ்வைத் தந்தது!
சங்கத் தமிழர் பெருமையைத்
தரணி புகழச் சொன்னது!
உழவர் நாளாய் மலர்ந்தது
உழைப்பின் அருமை புகழ்ந்தது
கழனியில் விளைந்த நெல்மணி
காளையின் கழுத்தில் நன்மணி!
இல்லம் சிறக்கச் செய்தது!
இனிப்புப் பொங்கல் ஆனது
உண்ணத் தேனாய் இனிக்கவே
உறவுப் பொங்கல் ஆனது!
கழனி எல்லாம் செழித்தன
காய்கனிகளும் விளைந்தன
பாலும் பழமும் கலந்தது
பாசப்பொங்கல் இனித்தது!
அழகுதாசன்