அறத்துப்பால் - அதிகாரம் 28 - பாடல் 7
- திருக்குறள்
குன்றிமணியைப் போலவே
பளபளப்பாய்த் தோன்றுவார்
குன்றிமணியின் மூக்கைப் போல்
கரிய நெஞ்சம் கொண்டிருப்பார்
புறத்தில் பெருமை தோன்றிட
அகத்தில் குன்றி வாழ்வது
சிறுமையான வாழ்வுதான்
சிறப்பில்லாத வாழ்க்கையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்