""வர, வர நீ நிறைய டி.வி. பார்க்க ஆரம்பிச்சுட்டே!''
""இல்லையே,...... ஒரு டி.வி. தானே
பார்க்கிறேன்!''
கே.விஜயலட்சுமி, திருப்பத்தூர் - 635601
""டின்லேயிருந்து எடுத்து என்ன சாப்பிடறே?''
""டின் பண்டம்!''
ஏ.நாகராஜன், சென்னை- 600075.
""கணக்கு பரிட்சையிலே மிஸ்டேக் ஆயிடுச்சுடா!''
""டோட்டல் மிஸ்டேக்கா?''
""டோட்டலாவே மிஸ்டேக்காயிடுச்சிடா''
பர்வதவர்த்தினி, சென்னை.
""டேய்,..... உன் வயித்தாலே என்னை மோதாதேடா,.... தள்ளி நில்லு!''
""ஏன்?.... "தொந்தி' ரவா இருக்கா?''
நெ.இராமன், சென்னை - 600074.
""இந்த ஃபோட்டோவிலே இருக்கிற அங்கிளை உனக்குத் தெரியுதாடா?''
""ஓ! யெஸ்! .... தெரியுதே''
""எப்படித் தெரியும்?....''
""அதான்நீ கையிலே வெச்சிக்கிட்டுக் காட்டறயே?''
டி.மோகன்தாஸ், நாகர்கோவில்.
""எதுக்குடா உங்க அக்கா உன்னைத் திட்டறாங்க?''
""அழுக்காறுன்னா என்னன்னு கேட்டாங்க...''
""அதுக்கு நீ என்ன சொன்னே?''
""ஆறு அழுக்கா ஓடும்போது ,.... அது, "அழுக்காறு' ஆயிடும்னேன்!''
எ.கே.ஸ்ரீசாகம்பரி, அந்தியூர் - 638501.