குறள் பாட்டு
அறத்துப்பால் - அதிகாரம் 11 - பாடல் 7
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
- திருக்குறள்
நமது துன்பம் துடைத்திட
நாடித் தேடி வந்திடும்
நல்ல நட்புக் கொண்டவர்
நெஞ்சில் நிலையாய் நிற்பவர்
நன்றிப் பெருக்கில் அவர்களை
என்றும் நெஞ்சில் நிறுத்துவோம்
எழுகின்ற பிறவி எல்லாமே
உதவிய உள்ளம் போற்றுவோம்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்