விடுகதைகள் (23/05/2020)

சித்தூர் சிறுமணலிலே காய்க்கும் கத்திரிக்காய், கூட்டிப் பார்த்தால் கொம்புக்கு முப்பது காய்... 

 1. விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது...
 2. மாவில் பழுத்த பழம், மக்கள் யாவரும் விரும்பும் பழம்... "ழ'தான் வித்தியாசம்...
 3. முதுகு மேல் கூடு... முத்தம்மாளுக்கு அது வீடு...
 4. மட்டையுண்டு,கட்டையில்லை.பூவுண்டு,மண மில்லை...
 5. பெயருக்குத்தான் புலி, உருவுமில்லை, செயலுமில்லை..
 6. ஏழு மலைக்கு அந்தப் பக்கம், எருமைக்கடா கத்துது...
 7. விடிய விடிய பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்...
 8. சித்தூர் சிறுமணலிலே காய்க்கும் கத்திரிக்காய், கூட்டிப் பார்த்தால் கொம்புக்கு முப்பது காய்...
 9. அத்துவானக் காட்டுக்குள்ளே குடை பிடிக்கும் அய்யா...
 விடைகள்
 1. தஞ்சாவூர் பொம்மை. 2. அப்பளம்.
 3. நத்தை. 4. வாழை. 5. அம்புலி.
 6. இடியோசை. 7. நட்சத்திரங்கள்
 8. காப்பிச் செடி (காப்பிக்காய்கள்).
 9. காளான்
 -ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com