உண்ணாமை வேண்டும் புலா அல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார்ப் பெறின்.
- திருக்குறள்
மாமிசம் உண்பது என்பது
உடலை வளர்க்கும் நோக்கமே
மற்றொரு உயிரை உண்டால்தான்
உடல் வளரும் என்பதில்லை
உற்றுணர்ந்து நோக்கினால்
மாமிசம் என்பது புண்ணாகும்
இன்னொரு உயிரின் புண்ணினை
உண்பதில் கருணை இல்லையே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்