பொருட்பால் - அதிகாரம் 50 - பாடல் 7
- திருக்குறள்
எதிலும் குறைகள் இல்லாமல்
எல்லா நிலையிலும் உற்றுணர்ந்து
வழி வகைகளைக் கற்றுணர்ந்து
செயலில் இறங்க வேண்டுமே
அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து
பொருத்தம் பார்த்து வினை செய்தால்
அஞ்சா நெஞ்சம் போதுமே
வேறு துணை ஏதும் வேண்டாமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்