கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அக்கறை என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...
1. முதல் பகுதிதான் இருக்கிறது, விளக்கத்தைக் காணோம்...
2. சிவபெருமானின் கையில் இந்த ஆயுதத்தைப் பார்க்கலாம்...
3. மாணவர்களுக்கு அறிவை அள்ளித் தரும் சாலை...
4. அறிவியல் சொல்...
5. காதோடுதான் இதைச் சொல்ல வேண்டும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. கலங்கரை,
2. திரிசூலம்,
3. வாசகசாலை,
4. விஞ்ஞானம்,
5. ரகசியம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கரிசனம்