மகாகவி பாரதியார் பொன்மொழிகள்

மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடம்பிலே தெம்பும், தீவிரமும் உண்டாகும்.
மகாகவி பாரதியார் பொன்மொழிகள்


மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடம்பிலே தெம்பும், தீவிரமும் உண்டாகும்.
ஒவ்வொருவருக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் அவசியம் வேண்டும்.
அன்பு,  கொள்கையில் இருந்தால் போதாது; அது செய்கையில் இருக்க வேண்டும்.
சோர்வும், அதைரியமும்  விளைவிக்கக்கூடிய எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம்கொடுக்காதே!
எந்தக் காரியத்தையும் உடனுக்குடன் செய்யும்போது, அதில் பெரும்பாலும் வெற்றி நிச்சயம்.
கைத் தொழிலாலே செல்வம் விளைகின்றது; அது அறிவுத் தொழிலால்  சேகரிக்கப்படுகிறது.
நாம், நமக்குத் தோன்றும் உண்மைகளை யாருக்கும் பயந்துகொண்டு மறைக்கக் கூடாது.
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் எடுத்த காரியத்தை உறுதியாக நடத்திச் செல்வதே வீரலட்சணம். அவ்வாறு செய்பவரே 
மனிதரில் சிறந்தவர்.
துன்ப நினைவுகள், சோர்வு, பயம் எல்லாம் அன்பில் அழியும். ஆனால் அந்த அன்புக்கு அழிவில்லை.
பக்தியாவது தெய்வத்தை நம்புவது.
கைம்மாறு கருதாமல் பிறருக்கு எந்த விதத்திலாவது செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் "ஈகை' எனப்படும்.
நம்பிக்கை உண்டானால் அங்கே வெற்றி நிச்சயம் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com