அறத்துப்பால் - அதிகாரம் 21 - பாடல் 8
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
- திருக்குறள்
தீய செயல்கள் செய்தவர்க்கு
கெடுதல் உறுதியானதே
நிழல் தொடர்ந்து செல்வதுபோல்
கேடு தொடர்ந்து சென்றிடுமே!
இருட்டில் தீமை செய்தாலும்
பாதத்தின் அடியில் நிழலுண்டு
நிழலே காட்டிக் கொடுத்திடும்
நீதி கெட்டு வாழாதே!
-ஆசி.கண்ணம்பிரத்தினம்