பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.
-பெர்னாட்ஷா
தைரியம், புத்தி, நற்பண்பு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள்.
-லாங்பெல்லோ
உண்மையை நேசியுங்கள்; தவறை மன்னியுங்கள்.
-வால்டேர்
பெருந்தன்மையான குணம், எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
-அரிஸ்டாட்டில்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரே வழி, அடுத்தவரின் வெற்றியை உங்கள் வெற்றிபோல் கொண்டாடி, அவரை வாழ்த்துவதுதான்.
-டாக்டர் அப்துல் கலாம்