இடுக்கண் அழியாமை

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.
இடுக்கண் அழியாமை

பொருட்பால்   -   அதிகாரம்  63   -   பாடல்  7


இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் 
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

- திருக்குறள்

இன்பமும் துன்பமும் உடலிலே 
சேரும் தன்மை கொண்டவை 
உடம்பைத் தேடித் துன்பங்கள் 
ஓடி வந்து ஒட்டலாம் 

என்ற உண்மை உணர்ந்தவர் 
கலக்கம் கொள்ள மாட்டாரே
வந்திடும் துன்பத்தைத் தாங்கிடும் 
வலிமை கொண்டு வாழ்வாரே


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com