சொல்வன்மை

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொல்வன்மை

பொருட்பால்   -   அதிகாரம்  65   -   பாடல்  7

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

- திருக்குறள்


தேவையானதைப் பேசிட
வல்லவனாய் இருந்திடு
சொல்லும்போது சோர்வின்றி 
அஞ்சிடாமல் சொல்லிடு

அந்த முறைகள் அறிந்தவன் 
அனைத்தும் உணர்ந்து பேசுவான் 
அவனைக் குழப்பி வென்றிட 
அறிஞராலும் இயலாது.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com