அன்பு மேகம் பொழிந்தது
நெஞ்சு அணைபோல் நிறைந்தது!
பண்பு நதிகள் பாய்ந்தது!
பழைய சண்டை ஓய்ந்தது!
இன்ப வயல்கள் விளைந்தது
இன்னல் பலவும் தொலைந்தது!
துன்பப் பசியும் மறைந்தது
துக்கம் முழுசும் குறைந்தது!
உலகம் உணவைத் தந்ததால்
உனது பசியும் போனது!
நமக்குப் பிறப்பு அரியது! - அதில்
நன்மை செய்தல் சிறந்தது!
மண்ணில் நாளும் உழைப்பது
மனிதர் கூட்டம் பிழைப்பது!
உன்னில் சக்தி உள்ளது!
உலகத் தொண்டு ஆற்றிடு!