""அக்கா, இனிமே என் கண்ணுக்கு நீ மை இடாதே!''
""ஏன்?''
""எனக்கு கரும்பூஞ்சையான்னு ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க!''
கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
""நாதஸ்வர வித்வான்கள் போராட்டமாம்!''
""எதுக்கு?''
""..."ஊதிய' உயர்வு கேட்டுதான்!''
பி.கவிதா,
சிதம்பரம் - 608002.
""பாலு, உங்க வாத்தியார் கிட்டே உனக்குப் பிடிச்ச குணம் என்னடா?''
""அடிக்கடிலீவு போடுவாரு.... அதுதாண்டா!''
தீ.அசோகன்,
சென்னை.
""செஃபோட குல்லா ரசத்திலே விழுந்திடுச்சு!''
""ஓ!....ரசகுல்லாவா ஆயிடுச்சா?''
ரா.காமாட்சி,
இராஜபாளையம்.
""தோல் கொடுப்பான் தோழன்!''
""தோள் கொடுப்பான்.... னு சொல்லுடா!''
""உனக்கு என் ஃபிரெண்டைப் பத்தித் தெரியாது!.... அவன் பழம் சாப்பிட்டா எனக்கு தோலைத்தான் தருவான்!''
கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
"".....ஐ நஅர பஏஉங.... இதை தமிழ்லே எப்படி சொல்லுவே?''
""ஐ!..... சாதம்!''
வி.ரேவதி,
தஞ்சாவூர் - 613007.