""டேய் இது குதிரையா?''
""இல்லைடா... கழுதை!''
""சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டா, ஏண்டா என்னைக் கழுதைன்னு திட்டறே?''
ஆர்.சுப்பு,
திருத்தங்கல் - 626130.
""என்ன சாப்பிடறே?''
""ராகி ரொட்டி!''
""உன் பேர் என்ன?''
""நாகி ரெட்டி!''
எம்.சுகாரா,
தொண்டி - 623409.
""டேய் கிரிக்கெட் விளையாட வர்றியா?''
""வேணாண்டா,... நீ அவுட் ஆனதும் உன் பேட்டைத் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போயிடுவே!''
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001.
""முத்துவுக்கும் ரவிக்கும் என்ன வித்தியாசம்?''
""நீயே சொல்லு!''
""ரவியோட கையெழுத்து முத்து முத்தா இருக்கும்.... ஆனா முத்துவோட கையெழுத்து ரவி ரவியா இருக்காது!''
நா.வினோத் குமார்,
பாராஞ்சி - 632510.
""..."ராமன் கடிதம் எழுதினான்' .... இது என்ன காலம்?''
""செல்ஃபோன் இல்லாத காலம்!''
ப.செல்வன்,
வளசரவாக்கம்.
""தல்...தல்...தல்...தல்...தல்...தல்...''
""என்னடா சொல்றே?''
""நீதான் பேனாவை தொலைச்சுட்டியே,.... உனக்கு "ஆறு'தல் சொல்றேன்!''
து. அன்னலெட்சுமி, 7/297, பிள்ளையார் கோவில் தெரு, தெற்கு வாகைக்குளம்,
உக்கிரன்கோட்டை வழி,
திருநெல்வேலி - 627202.