""பாண்ட் தைக்கச் சொன்னேன் அந்த டெய்லர் சட்டை பண்ணவே இல்லை!''
""எனக்கு புரியவேயில்லே!... பாண்டை எதுக்கு சட்டை பண்ணணும்?''
இர.கிருத்திக்குமார்,
13, நெய்வேலி - 607803.
""தொல்லைக்கு மன்னிக்கணும் ..''
""நீ எந்த தொல்லையும் தரலையே?"''
""நீ எனக்கு கொடுத்துட்டு இருக்கும் தொல்லைக்கு நான் உன்னை
மன்னிக்கனும்னு சொல்றேன்.''
என். பர்வதவர்த்தினி
சென்னை.
""உயிர் எழுத்து எத்தனை?''
""மூணு சார்!''
""எப்படிடா?''
""உ...யி...ர்... மூணு எழுத்துதான் சார்''
செ.ஆசைத்தம்பி,
தாரமங்கலம்
"" ஒன் டூ ஹன்ட்ரெட் வரை தலை கீழா சொல்லு பார்ப்போம்?''
"" எனக்கு நேரா சொல்லவே வராது!''
ஏ. நாகராஜன்
பம்மல்.
""வேடந்தாங்கலுக்கு பறவைகள் எங்கிருந்து வருது தெரியுமாடா உனக்கு?''
""எல்லா பறவைகளும் முட்டையிலிருந்து தாண்டா வரும்!''
க.அருச்சுனன்.
செங்கல்பட்டு-603001.
""டாக்டர் தாத்தாவுக்கு மூணு நாளைக்கு மருந்து எழுதிக் கொடுத்தார்டா?
""டாக்டர் அவ்வளவு நாளா உக்கார்ந்து எழுதினாரு?''
வ.வெற்றிச்செல்வி,
அகஸ்தியன் பள்ளி வேதாரண்யம்.