நூல் புதிது!

மேற்கண்ட ஒவ்வொரு புத்தகத்திலும் ஆறு கதைகள் திருக்குறள் நெறியை போதிக்கும் வகையில் சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர். புத்தகங்கள் அனைத்தும் வண்ணப்படங்களுடன் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளன.
நூல் புதிது!

திருக்குறள் கதைகள்-3


ஆசிரியர் - சோதி
பக்கம் - 40
விலை - ரூ 70/-
திருக்குறள் கதைகள் -4
ஆசிரியர் - சோதி
பக்கம் - 40
விலை - 70/-
திருக்குறள் கதைகள் - 5
ஆசிரியர் - சோதி
பக்கம் - 40
விலை - ரூ70/-
மேற்கண்ட ஒவ்வொரு புத்தகத்திலும் ஆறு கதைகள் திருக்குறள் நெறியை போதிக்கும் வகையில் சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர். புத்தகங்கள் அனைத்தும் வண்ணப்படங்களுடன் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளன. குழந்தைகளையும், ஏன் பெரியோருகளையும் கவரும் வகையில் புத்தகங்கள் அமைந்துள்ளன. வெளியிட்டோர் - நன்மொழிப் பதிப்பகம், 16 கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003. கைபேசி - 9345450749

பூக்களின் பாக்கள்!


ஆசிரியர் - இ.குழந்தைசாமி
பக்கம் - 144
விலை - ரூ 200/-
123 குழந்தைப் பாடல்கள் அடங்கிய ஒரு இசைப் பொக்கிஷம் இந்த நூல்! நல்ல சந்தத்துடனும் கருத்துடனும் பிள்ளைகள் ரசிக்கும் வண்ணமும் எழுதப்பட்ட பாடல்கள்! "தேர்வை விரும்புட' பாடலில், "பதட்டமின்றி கேள்வித்தாளைப் படிச்சுப் புரிஞ்சுக்கோ!..... அறிந்த கேள்வி அதனின் விடையை முதலில் எழுதிக்கோ!.... என்ற வரிகள் வியப்பூட்டும் வழிகாட்டிகள்!
"ஊதல்' பாடலில், ... நிறுத்தம் வந்தால் பேருந்தை நிற்க வைக்கும் ஊதலு!..... நின்றிருக்கும் பேருந்தை இயங்கச் செய்யும் ஊதலு..... விளையாட்டுக் களத்தினிலே விதியை நாட்டும் ஊதலு..... போக்குவரத்துக் காவலரும் போற்றும் நல்ல ஊதலு.... வரிகள் ஊதலின் பயன்களை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறுகிறது! இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை!
வெளியிட்டோர் - ஆரோ பதிப்பகம், 61, நியூ பாத்திமா நகர் ஏழாம் தெரு, விளார் சாலை, தஞ்சாவூர் - 613006. கைபேசி - 9080801016.

சிறுவருக்கான அறக்கவிதைகள்


ஆசிரியர் - செ . ஏழுமலை
பக்கம் - 136
விலை - ரூ 125/-
அம்மா...,தந்தை...,பாப்பா பாடு..., தாத்தா கதை சொல்லு..., பாட்டி..., முதலான தலைப்புகளில் 116 குழந்தைப்பாடல்களை எழுதியுள்ளார் ஆசிரியர். மிக நன்றாக அறிவூட்டும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. வெளியிட்டோர் - பானு ஏழுமலை, கர்னல் காட்டேஜ், 12பி, கோதாவரி தெரு, ஜோதி நகர், அண்ணனூர், சென்னை - 600062. கைபேசி - 9003210050.
நடை வண்டிப் பாட்டு! (சிறுவர் பாடல்கள்)

ஆசிரியர் - பொன்னியின் செல்வன்


பக்கம் - 96
விலை - ரூ 100/-
72 பாடல்களின் தொகுப்பு இந்த நூல். ஆசிரியருக்கு அறிமுகமே வேண்டாம். அற்புதக் கவிஞர்! "எங்கள் ஊர் குளம்' பாட்டில் ...."எங்கள் ஊரின் கிழக்கினிலே இருக்குது பெரிய அல்லிக் குளம்....சுங்க வரிகள் இல்லாமல் சுற்றிப் பலஊர் பறவை வரும்!.... வரிகள் இனிமையானவை. "பூ' கவிதையில் கடைசி நான்கு வரிகள் அற்புதமானவை. ...."பூக்களோடு வாழும் வாழ்க்கை பொலிவில் என்னைத் தேடணும்..... தூக்கிப் பூவை புகழ்ந்து பாடும் தூய கவிதைப் பூக்கணும்!....' ஆசிரியருக்கு மற்றொரு சபாஷ்! சிறுவர் முதல் பெரியவர் வரை படித்துச் சுவைக்க வேண்டிய புத்தகம்! வெளியிட்டோர் - குறிஞ்சித் தென்றல் பதிப்பகம், தமிழாலயம், மயில் நகர், வேதியபுரம் அஞ்சல், அம்மன்பேட்டை, தஞ்சாவூர் - 613205. கைபேசி - 9443793257.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com