""ரப்பர் பாம்பை ஏண்டா ஆற்றில விடுறே''
""தண்ணி பாம்பை பயமுறுத்தறேன்.'''
- என். பர்வதவர்த்தினி,
சென்னை 75
""பாட்டி ஒரு கதை சொல்லேன்!''
""என்னோட ஃபேஸ் புக்கிலே அப்டேட் பண்ணியிருக்கேன்!.... படிச்சுட்டு லைக் போடுடா பேராண்டி!''
பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.
""ஓட்டப் பந்தயம் ஓட வந்த முயலிடம் என்ன எழுதி வாங்கறாங்க?''
"" நடு வழியில் தூங்கக்கூடாதுன்னு உறுதி மொழிப் பத்திரம் வங்கறாங்க..''
- ஏ. நாகராஜன்,
பம்மல்
""நான் எழுதின ஜோக் மதல்முதலா பத்திரிகையிலே வந்திருக்குடா!...''
""ஓ!.... இதுதான் ஆ"ரம்பமா'...!''
ஆர்.சுப்பு
திருத்தங்கல் - 626130.
""தைக்கும் சித்திரைக்கும் என்ன வித்தியாசம்?''
""தை மாசம் சூரியனுக்கு நாம பொங்கல் வைப்போம்...சித்திரை மாசம் சூரியன் நம்மள பொங்க வைக்கும்!''
எஸ்.பிரபுராஜா,
மதுரை.
""நான் நூடுல்ஸ், பிரைடு ரைஸ், பொங்கல், கிச்சடி எல்லாம் பண்ணுவேன்!....
நீ என்ன பண்ணுவே?''
""அதெல்லாம் போட்டால் தட்டை காலி பண்ணுவேன்!''
எஸ்.பி.விஜயராஜகோபாலன்,
சென்னை - 600090