""பந்தயத்துல முதல்ல ஓடி வந்தும்,
தோல்வியா ஏன்?''
""நடை போட்டினு தெரியாம, ஓடிட்டேன்!''
செந்தில்குமார். எம்
சென்னை-78.
""ஏண்டா வயலிலே இறங்கி ஆடறே?''
""நீதானை வயல்லே ஆடுடான்னு சொன்னே?''
மு . பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி.
""அப்பா , எனக்கு ட்ரெட்மில்' ஒன்னு வாங்கி தாங்க...!
""நடக்கிற காரியமா பார்த்து பேசு..!
ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம்.
""கத்திச் சண்டை போட்டா என்ன ஆகும்?''
""தொண்டை கட்டிக்கும் சார்!''
கா . நாகமுத்து,
குளத்தூர்.
""மொபைல் போனையே பார்த்துக்கிட்டு இருக்காதே.... போனுக்கு வெளியிலேயும் ஒரு உலகம் இருக்கு!''
""லிங்க் இருந்தா அனுப்பு,.... பார்க்கிறேன்!''
ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம்.
""ஆடு பேசுதுடா!''
""அப்படியா?.... ஆச்சரியமா இருக்கே...என்ன பேசுது?''
""ஏப்ரலுக்கு அப்புறம் என்னன்னு கேட்டேன்!..... "மே' ன்னு சொல்லுது!''
கே . இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.