1.தச்சர் செய்யாத கதவு, தானே திறக்கும். தானே மூடிக்கொள்ளும்...
2.மாப்பிள்ளை என்னவோ பளபளாதான், வழவழாதான். ஆனால் வயிற்றால்தான் நடப்பார் இந்த மாப்பிள்ளை...
3.இந்தக் கடைக்கு வார விடுமுறை என்பது கிடையவே கிடையாது...
4.இந்த நீர் கடலிலும் கலக்காது... இதை யாராலும் குடிக்கவும் முடியாது...
5.இந்தக் காவலாளி வீட்டிலேயே இருப்பான். இவனது கூட்டாளி மட்டும் அடிக்கடி வெளியே சுற்றச் சென்று விடுவான்...
6.பூமியில் பிறந்து, புகையாக மாறி மேலே போகும்...
7.அழகான வெள்ளை மாளிகை. உள்ளே போகத்தான் வாசலும் இல்லை, ஐன்னலும் இல்லை...
8.இதைத் தொட்டுப் பார்க்கத்தான் முடியும். எட்டிக்கூடப் பார்க்க முடியாது...
விடைகள்
1. கண் இமை
2. பாம்பு
3. சாக்கடை
4. கண்ணீர்
5. பூட்டு, சாவி
6. பெட்ரோல்
7. முட்டை
8. முதுகு