அறத்துப்பால் - அதிகாரம் 16 - பாடல் 8
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
- திருக்குறள்
செருக்குத்தனம் கொண்டவர்
பொருந்தாததைச் செய்திடுவார்
சிந்தனையின்றிச் செய்திடும்
தீய செயலை மறந்திடு
தீமை செய்த பேர்களை
தீமையால் தண்டிக்கக் கூடாது
தகுதியை உயர்த்திக் காட்டியே
வெல்ல வேண்டும் அவரையே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்