நினைவுச் சுடர்!:  அன்னையின் பெருமிதம்!

நினைவுச் சுடர்!:  அன்னையின் பெருமிதம்!

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை அவருடைய தாய், "ரானடே! இங்கே வா' என்று கூப்பிட்டார். "எதற்கம்மா அழைத்தீர்கள்?' என்று கேட்டபடி தாயின் அருகில்  ஓடிவந்தான் ரானடே.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை அவருடைய தாய், "ரானடே! இங்கே வா' என்று கூப்பிட்டார். "எதற்கம்மா அழைத்தீர்கள்?' என்று கேட்டபடி தாயின் அருகில்  ஓடிவந்தான் ரானடே.

"ரானடே! இந்தா உனக்கு இரண்டு லட்டுகள். ஒன்றை நீ எடுத்துக்கொண்டு இன்னொன்றை உன் நண்பனுக்குக் கொடுத்து விடு' என்றார்.

அம்மா கொடுத்த லட்டில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருந்தது. பெரிய லட்டை நண்பனுக்குக் கொடுத்துவிட்டு சிறிய லட்டை தான் எடுத்துக் கொண்டான் ரானடே.

அவன் பெரிய லட்டை தன் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியின் மகனுக்குத்தான் கொடுத்தான். இத்தனை சிறிய வயதில் மகனின் பரந்த மனதை நினைத்துப் பெருமிதம் கொண்டார் அவனுடைய தாயார்.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் நீதிபதியாகவும்,  சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த மகாதேவ கோவிந்த ரானடே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com