ஒருவன்: புக்கை கிழிக்கத்தானே முடியும்... அந்தக் கோபு "அண்ணன் உடைச்சிட்டான் இனிமே புக் பார்க்க முடியாது'ன்னு அழுவுறானே... ஏன்?
மற்றவன்: அதுவா? அவன் பார்த்தது ஃபேஸ்புக். உடைந்தது அவன்
அண்ணனோட செல் ஃபோன்.
நாஞ்சில் சு. நாகராஜன்
கன்னியாகுமரி மாவட்டம்.
பெரியவர்: ""உன் பேரு என்ன பாப்பா?''
சிறுமி: ""காவேரி''
பெரியவர்: ""ஸ்வீட் நேம்...''
சிறுமி: ""ஸ்வீட் நேம் இல்ல தாத்தா...
ரிவர் நேம்''
கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்-605 602.
ஆசிரியை: ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம்?
மாணவன்: ரேஷன்லயா? மற்ற கடைகள்லயா மிஸ்...?
வி.ரேவதி,
தஞ்சை.
அம்மா: கடைக்குப் போய் அப்பளப்பூ வாங்கிட்டு வாடா..''
மகன்: ""எத்தனை முழம் வாங்கணும்?''
ஏ. நாகராஜன்,
பம்மல்.
ராமு: நான் "மண்டே' பிறந்தேன்.
நீ எப்படா பிறந்தே?
தினேஷ்: நான் "சண்டே' பிறந்தேன்.
ராமு: டூப் விடாதடா... அன்னிக்கு "லீவு' நாள்!
ஆர். சுந்தரராஜன்,
சிதம்பரம்.
ரசிகா: நம்ம டீச்சருக்கு என்னடி ஆச்சு?
ராகிணி: ஏன்டி அப்படி கேக்குற...?
ரசிகா: பாரேன்... போர்டுல திருக்குறளை அவங்களே எழுதிட்டு, இதை எழுதியது யாருன்னு நம்மைப் பார்த்துக் கேட்கறாங்க...
ராகிணி: ? ? ? ? ?
ஜோ. ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.