அறத்துப்பால் - அதிகாரம் 10 - பாடல் 8
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
- திருக்குறள்
பேசுவதற்கும் உண்பதற்கும்
வாயும் நாவும் பயன்படும்
பிறர்க்குத் துன்பம் செய்திடாத
சொற்கள்தானே உருப்படும்
பிறர்க்குக் கேடு செய்திடாத
சிறுமையில்லாச் சொற்களே
இப்பிறப்பும் மறுபிறப்பும்
இன்பம் ஊட்டி மகிழ்ந்திடும்!
-ஆசி.கண்ணம்பிரத்தினம்