""ஏண்டா நேத்து யாரும் கிளாஸூக்கு வரலே?''
""நாளைக்கு வந்து பார்ப்பேன்.... கிளாஸ்
சுத்தமா இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க!''
ஜி . யனிலா,
திருவொற்றியூர்
""ஆடு, மாடு எல்லாம் வாயில்லாத பிராணிகள்!''
""அதுக்கு என்ன?''
""அதுங்க ஏன் தரையிலே படுத்துத் தூங்குது?''
""தெரியலையே.... நீயே சொல்லு...''
""அதுங்க "பாயில்லாத பிராணிகள்!''
மா . பெனட் ஜெயசிங்,
புதுதில்லி.
""அக்கா நீ எழுதின கதையிலே உப்புச் சப்பே இல்லியே!''
""படிக்க வேண்டியதுதானே.... நீ ஏன் அதை சாப்பிட்டுப் பார்த்தே?''
உமர்,
கடையநல்லூர்.
""ஆப்பிள் ஸ்வீட்டா?.... தர்பூசணி ஸ்வீட்டா?''
""இரண்டுமே ஸ்வீட் இல்லை!.... பழ வகைகள்!''
கே . இந்துகுமரப்பன்,
விழுப்புரம் - 605602
""தம்பி உங்க அப்பா டீக்கடை வெச்சிருக்காரா?''
""ஆமாம்.... ஏன் சார்?''
""..."டீக்குள் விரலை விட்டால் நந்தலாலா....'' ன்னு எழுதியிருக்கியே.... அதான்!''
ஆர் . சுந்தர்ராஜன்
சிதம்பரம் - 608001.
""ஆன் லைன் வகுப்புக்கும், நேரடி வகுப்புக்கும் என்ன வித்தியாசம்?''
""ஆன் லைன் வகுப்புலே நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கிட்டே படிக்கலாம்!''
பி . கவிதா, சிதம்பரம்.