கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் உலகத்தில் சிறப்பிடம் பெற்ற சிகரம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. எழுதுவதற்கு இது உதவும், மந்திரக்கோல் அல்ல...
2. சாக்ரடீஸ் போன்றவர்கள் உதிர்த்தது...
3. ஆந்திர மாநிலத்தில் பிரபலமான பெரியவர்கள்...
4. நமது அண்டை நாடுகளில் ஒன்று...
5. பாலைவனக் கப்பல்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. எழுதுகோல்,
2. தத்துவம்,
3. ரெட்டியார்,
4. பாகிஸ்தான்,
5. ஒட்டகம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : எவரெஸ்ட்