கேள்வி: பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் கழுதைப் புலியால் ஏதெனும் பயன் இருக்கிறதா?
பதில்: என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? காடுகள் சுத்தமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தக் கழுதைப் புலிகள்தான். பிற விலங்குகள் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிட்டுப் போகும் எச்சங்களையும் மிச்சங்களையும் இவை ஆர்வத்தோடு சாப்பிட்டுக் காலி பண்ணி விடும். இதனால்தான் காடுகள் நாற்றம் எடுக்காமல் சுத்தமாக இருக்கின்றன. கழுதைப் புலிக்கு "வனத் துப்புரவாளர்' என்ற செல்லப் பெயர் கூட உண்டு.
இந்த அருவருப்பான கழுதைப் புலியைக்கூட சமைத்துச் சாப்பிடவர்கள் இருக்கிறார்கள். தைரியத்தை அதிகரித்துக் கொள்ள அந்தக் கால எகிப்தியர் இதன் இதயத்தைச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில்கூட குணப்படுத்தும் சமாசாரம் கழுதைப் புலியின் உடலில் இருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.