""குளிக்கும்போது சோப்பை கீழே போட்டு குளிக்கிறியே ஏன்?''
""நீங்கதானே சோப்பைப் போட்டு குளிக்கச் சொன்னீங்க?''
நா . ஆமினத்து ஜாக்ரினா,
கீழக்கரை.
""வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் எங்கியாவது போகலாம்னு எங்க அப்பா சொல்லியிருக்காரு!''
""ரெண்டு ஊர்லேயுமே வெய்யில் இருக்காதேடா!''
வி . ரேவதி,
தஞ்சாவூர்.
""அமாவாசை அன்று நிலவு ஏன் தெரிவதில்லை?''
""அன்னிக்கு ரொம்ப இருட்டா இருக்கறதாலே தெரியறதில்லே சார்!''
ம . அக்ஷயா,
அரூர்.
""அக்கா என்ன பண்றாங்க?''
""காயிலேயிருந்து பூ பண்றாங்க??
""என்னடீ சொல்றே புரியவேயில்லே!''
""தேங்காய் திருவறாங்க!''
ஆர் . சுப்பு,
திருத்தங்கல்.
""இதெல்லாம் ரொம்ப முக்கிய கேள்விகள்!....''
""எப்படி சொல்றே?''
""பதில் எழுதத் தெரியாமல் நான் ரொம்ப முக்கிய கேள்விகள்!...''
எஸ் . வேல் அரவிந்த்,
திண்டுக்கல் - 624005.
""முண்டம்!... அறிவிருக்கா?.... முட்டாள்!''
""யாரைத் திட்டறே?''
""ஃபோனை!''
""எதுக்கு?''
""எங்கப்பா எங்கூட ஃபோன் பேசிட்டு, "சரி, நீ ஃபோன வைடா' ன்னு சொன்னாரு!''
மு . பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி - 614715.