அறத்துப்பால் - அதிகாரம் 8 - பாடல் 8
- திருக்குறள்
பாலை நிலத்தில் நீரின்றி
மரம் அங்கே காய்ந்திடும்!
நீர் வளம் இல்லா பாலைதனில்
மரம் தளிர்க்க வழியில்லை
நெஞ்சில் அன்பு இல்லாமல்
வாழும் வாழ்க்கை வறட்சியே
தளிர்த்திடாத மரத்தைப் போல்
அன்பில்லாமல் வாழாதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்