""நிலா முழுவதுமாய் மறையும் நாள் எது?''
""தெனமும் பகல்லே சார்!''
எஸ் . கார்த்திக் ஆனந்த்,
திண்டுக்கல் - 624005
""எங்க சித்தப்பா வேஷ்டியிலே ரெண்டு எறும்பு மெள்ளமா ஏறிச்சு!''
""அப்புறம்?''
""திடீர்னு ரெண்டு 60 கி.மீ. வேகத்துலே போச்சு!''
""எறும்பா? ஆச்சரியமா இருக்கே?...''
""ஆமா!... அவர் அந்த வேஷ்டியோடயே பஸ்ஸிலே ஏறிட்டாரு!''
கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605002.
""எங்க தமிழ் டீச்சருக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு!''
""எப்படி சொல்றே? ''
""தினமும் போர்டுலே செய்யுளோ, குறளோ எழுதிட்டு இது யார் எழுதினதுன்னு கேக்கறாங்க!''
பி . பரத்,
சிதம்பரம்.
""படி, படின்னு சொன்னதைக் கேக்காம....''
""ஃபெயிலாயிட்டியா?''
""படி தடுக்கி விழுந்துட்டேன்!''
சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
""பேராண்டி!.... இதுக்குப் பேர்தான் ஈஸி சேர்!''
""போ, தாத்தா!.... இதுலே ஏற தம்பி எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா?''
கோ.இனியா,
கிருஷ்ணகிரி.
""அந்த பசுமாடு பத்து லிட்டர் பால் கறக்கும்?''
""ரொம்ப ஆச்சரியமா இருக்கே?.... அதுக்கு பால் கறக்கத் தெரியுமா?....
எங்கே கத்துக்குச்சி?''
மு . பெரியசாமி,
விட்டுக்கட்டி.