அறத்துப்பால் - அதிகாரம் 9 - பாடல் 8
பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.
- திருக்குறள்
விருந்தைப் போற்றும் வேள்வியை
விரும்பிடாத வீணர்கள்
பொருளைப் போற்றி வாழுவார்
புகழில்லாமல் வளருவார்
உதவிடாமல் வாழ்வது
பயனில்லாத வாழ்வென்று
உறவில்லாமல் போனபின்
உணர்ந்து நொந்து வாடுவார்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்